கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கடந்த 15 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் உள்ளடங்கலாக ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்புக்கள் கொஸ்கொட , பேலியகொடை, பொரளை மற்றும் கொஹவல ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.