வட­கி­ழக்கு வீட­மைப்பு அமைச்சு அலுவலகத்தில் தேங்கிக் கிடந்த ஆவ­ணம்

359 0

வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் கல் வீட­மைப்பு பணி­களை ஐ.நா. முக­வர் நிறு­வ­னங்­கள் ஊடாக முன்­னெ­டுப்­பது தொடர்­பான ஒப்­பந்த வரைவு தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­சர், மனோ­க­ணே­ச­னின் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்­பப்­பட்­டும் இரண்டு வாரங்­க­ளாக அது கிடப்­பில் கிடந்­துள்ள­தாக, வீட­மைப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­தான் அந்த ஒப்­பந்த வரைவு கிடைத்­த­தா­க­வும், அது அமைச்சு அதி­கா­ரி­க­ளால் பரி­சீ­லிக்­கப்­பட்டு நேற்­று­முன்­தி­னம் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­துள்­ளார்.

25 ஆயி­ரம் கல்­வீ­டு­களை வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் அமைக்க ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. அமைச்சு மாற்­றங்­க­ளால் அந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது தாம­த­மா­னது. இது தொடர்­பில் நீண்ட இழு­பறி ஏற்­பட்டு வட­கி­ழக்கு மாகாண செய­லணி ஊடாக அதனை முன்­னெ­டுக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்­தச் செய­லணி ஏற்­க­னவே இரண்டு தட­வை­கள் கூடி­யுள்ள நிலை­யில், நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க் கிழமை மூன்­றா­வது கூட்­டம் இடம்­பெற்­றது. 25 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் ஒப்­பந்­தத்தை ஐ.நா. முக­வர் அமைப்­புக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை ஏற்­க­னவே அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இந்த நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தம் மேற்­கொள்­வ­தற்­கா­கத் தயா­ரிக்­கப்­பட்ட புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை வரைவு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பிக் கருத்­துக் கேட்­கப்­ப­ட­வேண்­டும்.

சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பு­வ­தற்­காக மனோ­க­ணே­ச­னின் அமைச்­சுக்கு இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. வீட­மைப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆனால், வரைபு தயா­ரான விட­யம் தனக்­குத் தெரி­யாது என்று அமைச்­சர் மனோ­க­ணே­சன் தெரி­வித்­தார்.உட­ன­டி­யாக அதனை சட்­டமா அதி­ப­ரி­டம் அனுப்பி வைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பில் அமைச்­சர் மனோ­க­ணே­ச­னைத் தொடர்பு கொண்டு  கேட்­டபோது . கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­தான் அந்த வீட்­டுத்­திட்ட ஒப்­பந்­தச் சட்ட வரைவு எனக்கு கிடைத்­தது. அது எனது அமைச்சு அதி­கா­ரி­க­ளால் பரி­சீ­லிக்­கப்­பட்டு நேற்று(நேற்­று­முன்­தி­னம்) சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­பட்­டது என்­றார்.

Leave a comment