சிறிசேன சிறப்பு விசாரனை ஆனைக்குழுவினை அமைக்க வேண்டும் -பந்துல

281 0

அரச வங்கிகளில் இடம் பெறுகின்ற ஊழல்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு விசாரனை ஆனைக்குழுவினை அமைக்க வேண்டும் என  கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனது வருமான வரி தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  நிதியமைச்சர் மங்கள  சமரவீர  குறிப்பிட்டுள்ளார். வருமான வரி தொடர்பில் உரிய   விசாரனைகளை மேற்கொண்டால் அதனை எதிர்கொள்ள தயார். ஆனால் அதற்கு முன்னர் நிதியமைச்சரின் வருமான வரி தொடர்பிலான விடயங்களை அவர்  பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வஜிராஷர்ம விகாரையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்   போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment