இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை  எந்தவொரு தனிநாட்டாலும் கையாள முடியாது- சீனா

218 0

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளிற்கு அதிக பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பு தனக்கு வழங்கப்படவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது

கொழும்பில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய சீனாவின் கடற்படை அதிகாரி ஹான் சியாஓகூ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்தின்  பாதுகாப்பு நிலவரம் குழப்பமானது கடுமையானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை  எந்தவொரு தனிநாட்டாலும் கையாள முடியாது நிரந்தரமாக நீடிக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவேண்டும்,இணைந்து செயற்படவேண்டும் உரிய தீர்வை கூட்டாக முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் அமைதியையும் ஸ்திரதன்மைமையையும் ஏற்படுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளிற்கு சீனா ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்துசமுத்திரத்தில் வெளிப்படையான திறந்த அனைவரையும் உள்ளடக்கிய கடல்சார் ஒழுங்கு நிலவுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளிற்கு சீனா தனது ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment