முயலுக்கு வைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண் காயம்

219 0

இரத்தினபுரி, எத்தோய டயஸ் தோட்டத்தில் முயலுக்குவைத்த துப்பாக்கி இலக்குத் தவறியதில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி எத்தோய டயஸ் தோட்டத்தில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரத் துப்பாக்கியால் முயல் ஒன்றை வேட்டையாடுவதற்காக இலக்குவைத்தபோது, குறித்த இலக்கு வீட்டில் இருந்து வெளியெ சென்ற பெண் மீது பட்டதில் அவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22-10-2018) காலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி டயஸ் தோட்டத்தில் வசிக்கும் பீ.ஏ.பத்மினி சந்திரலதா வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட முயல் மற்றும் மரத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment