ஜே.வி.பி.யின் போராட்டத்தில் பொது நோக்கமில்லை – ரோஹித

213 0

அரசாங்கத்தின்  முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை மேற்கொள்ளும்  போராட்டம் அவர்களின் அடுத்த அரசியல் இருப்பினை  தக்கவைத்துக் கொள்வதற்காகவே அன்றி பொது நோக்கம் ஏதும் கிடையாது என  கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மேலும் கடந்த மூன்று வருடகாலமாக அரசாங்கத்தின் அனைத்து ஊழல்மோசடிகளுக்கும்,முறையற்ற செயற்பாடுகளுக்கும். ஜே.வி பி.யினர் துணைபோயுள்ளனர். இவர்களின் பிரதான நோக்கம் நிலையான அரசாங்கத்தில் இருப்பதை விட நிலையற்ற அரசாங்கத்தில்  செல்வாக்கு செலுத்தி தங்களின் அரசியல் இருப்பினை தக்கவைத்தக் கொள்வதே எனவும்   தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment