நீதிபதி வராததனால் பிற்போடப்பட்ட ரவியின் வழக்கு

202 0

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நவம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட இருந்தது.

இருப்பினும் பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய் சாட்சி கூறியதாக இரகசிய பொலிஸாரினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment