நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

237 0

முகத்துவார கடற்பரப்பில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவனை இன்றைய தினம்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முகத்துவார பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில் டிலாசால் பாடசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடற்பரப்பில்  நீராடுவதற்காக தனது நண்பர்களுடன்  குறித்த மாணவன் சென்றுள்ளான். இந்த நிலையிலேயே  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதனை அடுத்து பொலிசார் மற்றும பிரதேசவாசிகளால்  மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது  காணாமல் போயிருந்த மாணவன் மீட்கப்பட்டுள்ளான்.

உயிரிழந்த மாணவன் 15 வயதுடைய ரத்திய உயன, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த திசாபதி லேக்கம்லாகே தரிது மதுஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முகத்துவார பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment