மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டது

204 0

மத்திய மலைநாட்டின் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை பெய்துவருவதன் காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த இரு தினங்களாக பெய்து வந்த அடை மழையினால் நீரோடைகள், ஆறுகள் என நீர் பெருகு்கெடுத்துள்ளதனால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக இன்று (22.10.2018) அதிகாலை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment