லத்து ரொஷன் உட்பட ஐவர் கைது

2316 0

சியபலாண்டுவ பகுதியில் வைத்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட சுஜீயின் உதவியாளர் ஒருவர் ஒரு தொகை தோட்டக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியபலாண்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வேன் ஒன்றில் குறித்த தோட்டக்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான 2958 தோட்டக்களும் 9 மில்லிமீற்றர் வகையான 32 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த லத்து ரொஷன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் காலி சிறைச்சாலையில் உள்ள ஜயலத் சுத்தா என்பரின் கட்டளையின் பிரகாரம் குறித்த தோட்டக்களை காலிக்கு எடுத்துச் செல்லும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன்​ வேனில் பயணித்த ஓட்டுளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment