இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு – பாகிஸ்தான் நடவடிக்கை

242 0

பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்தனர். 

குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Leave a comment