நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3,560 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவின் உத்தரவுக்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்தார்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6,020 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.