பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி 200 க்கும் மேற்பட்ட பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.
குறித்த பேரணி கொழும்பு அத்துருகிரிய நகரில் இன்று பி.ப 3.00 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது. பேரணியின் நிறைவில் ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி விசேட பூஜை ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த பூஜை மாலை 6.00 மணிக்கு பேராசிரியர் ஹிந்துருகரே தம்மரத்தன தேரர் தலைமையில் நடைபெறவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

