சட்டவிரோதமான ஒரு தொகை சிகரட்டுடன் இருவர் கைது

328 0

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும், நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இன்று (21) அதிகாலை டுபாய் இல் இருந்து FZ 547 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களின் பயணப் பொதியில் இருந்து 195 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 39,000 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 1,950,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment