சுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது – அனுராத ஜயரட்ன

308 0

anuratna-jeyaratne_ciசுற்றாடல் அழிவினை தடுக்க முடியாது என மஹாவலி மற்றும் சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை அமைச்சின் பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
பேராதனைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு தடவையும் உலகின் எந்தவொரு மூலையிலாவது ரகர் மைதானமொன்றுக்கு நிகரான அளவு காடு அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கடல் அழிவினை மேற்கொள்ளும் நாடுகளின் வரிசையில் இலங்கை 5ம் இடத்தை வகிப்பதாக தெரிவித்துள்ளார்.