லஞ்சம் கோரும் அதிபர்கள் குறித்து 1954க்கு அறிவிக்க முடியும்

319 0

1954_ciபிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கு லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் 1954 என்ற இலக்கத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக பணம் அல்லது பாலியல் ரீதியான லஞ்சம் கோரும் அதிபர்களுக்கு எதிராக இந்த  இலக்கத்தினை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் , அதிபர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்வதனை சில பெற்றோர் மூடி மறைப்பதாகவும்  லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.