ஜனாதிபதி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மாலை சந்திப்பு

256 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருமாகிய இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த வாரம் பிரதமர், சட்டமா அதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி கைதிகள் விடயத்தில் தீர்மானம் எடுக்கப் போவதாக ஜனாதிபதி அக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இன்று மாலை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை சபைக் கூட்டமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment