மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்

196 0

இந்தியாவின் ரோ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.இதனடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரோ புலனாய்வு அமைப்பின் பிரதானிகளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில்விக்ரம சிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Leave a comment