உள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு

230 0

உள்ளாச விடுதியொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஹட்டன் – வனராஜா பகுதியிலுள்ள உள்ளாச விடுதியை சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே கஞ்சா செடிகள் ஒருத்தொகை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உதவி பொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மூன்று கஞ்சா செடிகள் சூட்சமமான முறையில் வளர்த்தமை தெரியவந்துள்ளது.

விடுதிக்கும் வரும் உள்ளாச பயணிகளுக்கு விற்பனை செய்ய  மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருகலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் அட்டன் பொலிஸார்தெரிவித்தனர்.

Leave a comment