இலங்கையில் தனது அபிவிருத்தி திட்டங்கள் மந்த கதியில் – இந்தியா கவலை

239 0

இலங்கையில் இந்தியா முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்கள்  மெதுவாக நகர்வது குறித்து இந்தியா கவலையடைந்திருக்கும் நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர்  மோடிக்கும் இடையிலான சந்திப்பு நிகழவுள்ளது என இந்தியாவின் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள நிலையிலேயே இந்து இதனை தெரிவித்துள்ளது.

இருநாடுகளை பொறுத்தவரையிலும் இந்த சந்திப்பு மிக முக்கியமானது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன என இந்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மெதுவாகவே நகர்வது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என இந்து  தெரிவித்துள்ளது.

அதேவேளை தனது முக்கிய சகாக்களான இந்தியா சீனாவிற்குஇடையிலான உறவுகளில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இலங்கை இந்தியாவுனடான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுயல்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தனது முன்னுரிமைக்குரிய திட்டங்களாக மத்தல விமானநிலையம்,பலாலி விமானநிலையம்,திருகோணமலை எண்ணெய் குதம்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம், போன்றவற்றை கருதுகின்றது என இந்துநாளிதழ் தெரிவித்துள்ளது.

இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பொருளாதார வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கைகள் போன்றவற்றிற்கு மத்தியிலும் இந்த திட்டங்கள் முன்னோக்கி நகரவில்லை என  இந்துநாளிதழ் தெரிவித்துள்ளது.

அரசியல் மற்றும் அதிகார மட்ட காரணங்களினாலேயே  இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகின்றன என கொழும்பை சேர்ந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர் எனவும் இந்து தெரிவித்துள்ளது.

மத்தல மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் இந்தியாவின் மூலோபாய நோக்கங்கள் நன்கு அறியப்பட்ட விடயம் என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் எனினும் கடந்த சில மாதங்களாக மத்தல விமானநிலையம் குறித்து இலங்கை முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வருகின்றது இதன் காரணமாக மத்தல விமானநிலையத்தை இலங்கை இந்தியாவிடம் கையளிக்குமா என்ற ஊகம் எழுந்துள்ளது எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இரு நாடுகளும் கொள்கை அளவில்  இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையும்இந்துநாளிதழ்சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் பேச்சுவாத்தைகள் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த உதவும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமரை கடந்த மாதம் சந்தித்த நிலையிலேயே இலங்கை பிரதமர் இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார் என தெரிவித்துள்ள இந்து மகிந்த ராஜபக்ச மோடி சந்திப்பை பலரும் நட்புறவு மீண்டும் மலர்வதற்கான அறிகுறியாக பார்த்துள்ளனர் எனவும் இந்துநாளிதழ் தெரிவித்துள்ளது.

Leave a comment