இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்!

190 0

பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார். 

நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 79 வயதில் நேற்று காலமானார்.

இவர் பிரபல பாடகர் தயாரத்ன ரணதுங்கவின் மனைவி என்பதுடன் இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியையும் ஆவார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment