அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை

266 0

தேசிய பாடசாலையில் நிலவும் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாட்டில் உள்ள 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான நேர்முக பரீட்சை நாளை முதல் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்பொழுது அதிபர்களுக்கு குறிப்பிட்ட அழைப்பு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கும் 8 வருட காலத்துக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் அதிபர்களை ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்ற அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a comment