கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை காட்டுவோம் – பவித்ரா

363 0

%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4போராட்டத்திற்கு உயிரூட்டும் கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினபுரியில் அறிமுகப்படுத்தப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்த புதிய மக்கள் பலத்தின் கன்னி பேரணி இரத்தினபுரியில் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, புதிய கட்சி ஆரம்பமாகும் விதத்தை பார்ப்பதற்கு 8ஆம் திகதி வாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமையானது, தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய இலஞ்ச தொகை என்று அவர் தெரிவித்தார்.