யோஸித ராஜபக்ஸ வெளிநாடு செல்ல முடியுமா என்பது குறித்து 28ஆம் திகதி முடிவு

311 0

josithaவெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஸித ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த கோரிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு காலம் வழங்குமாறு சட்டமா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீதிபதி ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ரகர் விளையாட்டின் போது ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு யோஸித ராஜபக்ஸவின் சட்டத்தரணி கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.