சைட்டம் மாணவர்களை பதிவு செய்ய 30 ஆம் திகதி வரை அவகாசம்

321 0

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீட மாணவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

இக்காலப் பகுதிக்குள் பதிவு செய்யாத மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீட மாணவர்கள் அனைவரையும் ஒரு மாத காலத்துக்குள் கொத்தலாவல மருத்துவ பீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment