அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)

43379 0

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா மதவாச்சியிலிருந்து ஆரம்பமானது.
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல என்றும், அது ஓர் அரசியல் விவகாரம் எனம் தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் 5ஆம் நாள் இன்றாகும்.
நடைபவனியின் முதலாம் நாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக முன்றலில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த நிலையில், கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுர சிறைச்சாலை வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய நேற்று வவுனியா மதவாச்சி பிரதேசத்தைச் சென்றடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி, இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டது.
குறித்த நடைபவனியில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புக்களைச் சேர்ந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பல தமிழ் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றுள்ள நிலையில், இன்றைய நடைபவனியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்து கட்சி அங்கத்தவர்கள் உட்பட யாழ் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனும் பங்கேற்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, தமது நடைபவனிக்கு வலுச்சேர்க்க முன்வருமாறு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

There are 0 comments

  1. Pingback: Homepage

  2. Pingback: superslot

  3. Pingback: สล็อตเว็บตรง

  4. Pingback: bonanza178

  5. Pingback: you could try here

  6. Pingback: Investing in the stock market

  7. Pingback: 툰코

  8. Pingback: ประกันรถยนต์ 2+

  9. Pingback: luxury pool villas in phuket

  10. Pingback: nagaqq alternatif

  11. Pingback: old pillsbury cookbook recipes,

  12. Pingback: pk789 สล็อต

  13. Pingback: Pragmatic Play

  14. Pingback: ราคาบอลวันนี้

  15. Pingback: คอมประกอบ

  16. Pingback: perdele aer

  17. Pingback: ks quik

Leave a comment