அமெரிக்க கரொலினாவில் அவசர நிலை

299 0

uva-students-accuse-officers-of-brutalizing-black-student-during-st-patrick-night-arrest-1426715221அமெரிக்காவின் வடக்கு கரொலினாவில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கறுப்பினத்தவர் ஒருவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனை அடுத்து இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கரொலினாவில் உள்ள சார்ளட் பகுதியில் இரண்டு தினங்களாக வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 16க்கும் அதிகமான காவற்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.