மகிந்தாநந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

281 0

mahindananda-aluthgamageநிதிமுறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமவேவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று மீண்டும் கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேநேரம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வாளரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.