இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

272 0

201607141050546209_rameshwaram-fishermen-attack-near-katchatheevu_secvpfஇலங்கை கச்சத்தீவு கடற்பிரதேசத்தில் கடற்றொழிளில் ஈடுப்பட்ட சுமார் 200 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் 50க்கும் மேற்பட்ட படகுகளை பயன்படுத்தியே கச்சத்தீவு பகுதியில் கடற்தொழில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலமாக இதுபோன்ற சம்வங்கள் அதிகரித்துள்ளது என ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளதாக த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குறிப்பிட்டுள்ளது.