ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை

267 0

ramith-700ii-696x385-620x330கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில், கிரிக்கட் விளையாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல்லவின் மகனுமான ரமித் ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டார்.

இன்று காலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதையில் தமது மகிழுந்தை செலுத்திய அவர் மரம் ஒன்றில் மோதியுள்ளார்.

இதனை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.