இலங்கை சிறைக்கு மாற்றுமாறு சாந்தன் கோரிக்கை

268 0

santhanராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற சாந்தன் என்ற இலங்கையர், தம்மை இலங்கைச் சிறைக்கு மாற்றுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

25 வருடங்களுக்கு மேலாக அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் இலங்கை இந்திய கைதிப் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் தம்மை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான மனுக்கன் இந்திய, இலங்கை மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.