மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை

320 0

uk-murder-720x480அமெரிக்காவின் ஒக்கஹாமா – டல்சா பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த தினம் காவற்துறை அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

40 வயதான குறித்த நபர், ஆயுதங்கள் இன்றி கைகளை உயர்த்தியபடி பாதையில் நடந்து செல்வதும், அவருக்கு பின்னால் சென்ற காவற்துறை அதிகாரிகள் அவரை சுட்டுக் கொல்வதுமான காணொளி தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனை அடுத்தே அங்கு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் பல கறுப்பினத்தவர்கள் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமையும், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.