இரசாயனத் தாக்குதல் குற்றச்சாட்டு

314 0

chem1ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துரப்பினரை இலக்கு வைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஈராக்கின் கயரா வான்படைத் தளத்திற்கு அருகில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் அனுப்பி வைக்கப்பட்ட உந்துகணை ஒன்று வீழ்ந்துள்ளது.

இதில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.