சுதந்திரத்தை பாதுகாக்க ஒரே நிலைப்பாடு – பிரதமர்

277 0

1சமுகத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை.

யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது.

அதனை அடுத்து ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.

ஊழல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாட தற்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தடுப்பதற்காக இன மற்றும் மத வாதங்களை தோற்றுவிக்க முயலுகின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.