வர்த்தக நிலையங்கள், சந்தைகள், நிறுவனங்களை பூட்டி எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தாருங்கள் -தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை-

328 0

090தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை 24 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு தமிழ் மக்கள் பேரவையினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எழுக தமிழ் பேரணிக்கு வர்த்தக சங்கம் ஆதரவு இல்லை என்ற பெய்யான செய்திகள் பரவி வருகின்றது. இருப்பினும் வர்த்தக சங்கம் முழுமையான ஆதாரவினை தருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் வர்த்தகர்களையும், பொது மக்களையும் பேரணிக்கான ஒத்துழைப்பிவை வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரியுள்ளது.