தந்தையை அடித்து கொலை செய்த மகன்

233 0

பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பளுகஸ்தமன பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment