தனது மகனை அடித்து கொலை செய்த தந்தை

216 0

களனி, பொல்லேகல கோனவல பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொல்லேகல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தந்தை அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment