‘எழுக தமிழ்’ பேரணிக்கு வணிகர் கழகங்கள் முழுமையாக ஆதரவு!

297 0

elukatamil-300x164தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும ஆதரவு தெரிவித்துள்ளன.யாழ்.நகர் வணிகர் கழகம் இதுவரை முடிவெடுக்கவில்லையென அறிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படவுள்ள இந்தப் பேரணி கல்வியங்காட்டில் ஆரம்பித்து திருநெல்வேலி மாவட்டச் செயலகம்; வழியாக யாழ்ப்பாணம் முற்றவெளி நோக்கிச் செல்லவுள்ளது.

இந்தப் பேரணிக்கு தமிழரசுக்கட்சி குழப்பம் விளைவித்து வருகின்ற நிலையினில் அக்கட்சியின் தீவிர ஆதரவாளரான வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரம் இது வரை ஆதரவு எதிர் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார்.

எனினும் வடமராட்சிதென்மராட்சி மற்றும் வலிகாமம்தீவக வர்த்தக அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.