கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்தினால் முற்றுமுழுதாக சேதமடைந்த கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்களின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவரச உதவிகோரிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்
அவர் அக்கடிதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட முறை மிக மோசமானதாவும் நாளாந்த சீவியத்திற்கான அவர்களின் எதிர்பார்ப்பு பரிதாபத்திற்குரியதாவும் மாறியுள்ளது.
எமது மாவட்டத்தில் நிலவுகின்ற அனர்த்த முகாமைத்துவதிற்கான வளக் குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு படையின் சேவையினை பெறமுடியாது உள்ளமை என்பவற்றால் தீயை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
5 மணிநேரங்களுக்கு மேலாக பெரும் சுவாலையாக எழுந்த தீயினால் பொதுச்சந்தையில் அமைந்திருந்த புடைவைக்கடைகள் இமளிகைக்கடைகள் பழக்கடைகள்இ உட்டபட 124 கடைகளுக்கு மேல் ஏரிந்து அழிந்துள்ளது.இங்கே அமைந்திருக்கின்ற ஒவ்வொரு கடைகளும் சராசரி இருபது இலட்சம் ருபாய்களுக்கு மேற்ப்பட்ட முதலீட்டை கொண்டிருந்தனர்.இவர்களின் மொத்த இழப்பு-221 மில்லியன் ருபாய்களுக்கு மேற்பட்டது என ஆரம்ப கணிப்புகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 22 பழக்கடைகள் 42 இலட்சம் ருபாய்களையும் புடவைக்கடைகள் 9 கோடி ருபாய்களையும் மளிகைக்கடைகள் 4 கோடி அறுபது இலட்சம் ருபாவினையும் தையல் கடைகள் 6 இலட்சம் ருபாய்களையும் பகுதி ரீதியான அழிவுகளின் மதிப்பீடு 4 கோடி ருபாய்களையும் கொண்டு உள்ளது என ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கை விளித்துள்ளது.
ஏற்கனவே யுத்தத்தினால் இழக்கப்பட்ட சொத்துகளிற்கு இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படதாத நிலையில் வங்கிகளிலும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிலும் பல இலட்சம் ருபாய்களை கடனாக பெற்றிருக்கிறார்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலட்சக்கணக்கான ருபாய்களுக்கு கடன் கொள்வனவிலும் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர். திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால் வர்த்தகர்கள் பெரு நட்டம் அடைந்துள்ளதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
அத்துடன் வர்த்தகர்களின் நீண்ட கடைத்தொகுதிகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதால் உடனடியாக வர்த்தகத்தை மீள மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் தென்படவில்லை ஆகவே மேற்படி விடயம் குறித்து தாங்கள் அதிவிசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறும் தங்களின் விசேட பணிப்பின் பேரில் அதி உச்ச நட்ட ஈட்டினை வழங்கி உதவுமாறும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்று. அக் கடிதத்தில் கூறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

