என்னுடைய வழக்கு ஆச்சரியமானது- கோட்டாபய

186 0

அரசாங்கத்தினால் விஷேட நீதிமன்றம் ஒன்றினை ஆரம்பித்து நாட்டின் பொருளாதரத்தை பாரியளவில் பாதித்த ஊழல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், தன்னுடைய தந்தைக்கு கட்டிய நூதனசாலைக்கு செலவு செய்த நிதி குறித்த வழக்கு இரண்டாம் இடத்தில் இருப்பது ஆச்சரியமானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வழக்கு விசாரணை என்ற போர்வையில், அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நூதனசாலையை நிர்மாணித்தமை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இராணுவத்தினர் உட்பட சிறிய குழுவினரை வேட்டையாடும் அரசாங்கத்தின் செயற்பாடாக இதனை குறிப்பிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment