விச பால் பக்கெட் குற்றச்சாட்டுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

204 0

கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றுக்கு விசம் கலந்த பால் பக்கெட் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அக்குழு இதனை அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நளீன் பண்டார மற்றும் ஹரீன் பிரணாந்து ஆகியோர் அடங்கிய குழுவினரே இவ்வாறு முறைப்பாடு செய்யவுள்ளனர்.

Leave a comment