கடுபொத, நோனாகம குளத்தில் குளிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மற்றுமொரு நபருடன் குளிக்க சென்ற போதே அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுபொத, நோனாகம பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.