உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஹங்குரங்கெத, ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியுடன் சேர்த்து அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர சிற ரக வெடி பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து ஒரு கிலோ கிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று வலபானே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.