ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

203 0

கூட்டு எதிர்கட்சியினரால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் இணையத்தளத்தின் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அதிகமான மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களை விட்டு தவிர்ந்து கொள்ளுமாறும் அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Leave a comment