காட்டு யானை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

210 0

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த காட்டு யானை இந்த காட்டு யானை செய்கை நிலத்தில் விழுந்து கிடந்ததை கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரால் அநுராதபுரம் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதன் பின்னர் வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவொன்று வந்து உயிரிழந்த யானையை மீட்டுள்ளனர்.

இந்த காட்டு யானை மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

சுமார் 25 வயதுடைய நான்கரை அடி உயரம் கொண்ட காட்டு யானையே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a comment