எனது கையில் எதுவும் இல்லை, பிரதமருக்கே அதிகாரம் உள்ளது- சுவாமிநாதன்

416 0

வடக்கின் வீடமைப்புத்திட்டத்தை  முன்னெடுக்கும் நகர்வுகள் இப்போது எனது கையில் இல்லை. வடக்குக்கான வீடுகளை அமைக்கும் திட்டம் பிரதமர் கையிலேயே உள்ளது,

என்னால் ஆலோசனைகளை வழங்க மட்டுமே முடியும் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி வழங்கினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் ஈ.பி.டி.பி எம்.பி டக்லஸ் தேவானந்தா வடக்கின் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை மற்றும் வடக்கின் வீட்டுத்திட்டம் எந்த கட்டத்தில் உள்ளது,

மழைக்காலம் ஆரம்பிக்கப்பட முன்னர் இந்த வீட்டுத்திட்டங்களை அமைக்க முடியுமா என கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment