கைது செய்யப்பட்டிருந்த நான்கு தேரர்களுக்கும் பிணை!

275 0

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு தேரர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது சம்பந்தமான வழக்கில் குறித்த தேரர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment