எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 5 இடங்களை ஒதுக்கியுள்ள ஒன்றிணைந்த எதிரணி!

173 0

ஒன்றிணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 5 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக,நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த எதிர்ப்பு பேரணியைத் தடுப்பதற்காக அரசாங்கம் நீதிமன்ற அனுமதியைப் பெறும் என்பதால், குறித்த இடங்கள் குறித்து இரகசியம் காக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment