மின்னேரியா விவகாரம் 10 பேருக்கு விளக்கமறியல்

276 0

மின்னேரிய தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த 10 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (28) காலை இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலும் 10 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment