கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலி

11531 230

கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜும்ஆ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 34 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவத்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment